|
Post by Admin on Jan 7, 2014 0:19:41 GMT
Welcome to your new ProBoards forum!
அறத்துப்பால்:செய்ந்நன்றி அறிதல்:குறள் 102
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"
வள்ளுவர் இக்குறளில் உதவி என்று குறிப்பிடாமல் "காலத்தி னாற்செய்த நன்றி" என்றே குறிப்பிடுகிறார். அது எவ்வாறு ?
வள்ளுவர் குறிப்பிடும் காலம் என்னும் தக்கதருணம் அவ்வுதவியை பெற்றவற்கே பொருந்தும். மேலும் அத்தகைய தருணமும் வாழ்வில் ஒரேயொரு முறை மட்டுமே நிகழக்கூடியதாக இருக்கும். அத்தகைய தருணத்தில் இறையருளால் கிடைக்கபெற்ற உதவியின் மூலம் தம் வாழ்வில் உன்னத நிலையினை அடைந்த ஒருவரால், நன்றிபெருக்குடன் அவ்வுதவிதனை மீண்டும் மீண்டும் நினைவுகூறும் பட்சத்தில், அதை ஈடுஇணையற்றதாய்,
"சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிதாகவே கருதுவர்”.
சாய்ராம்
|
|